Thursday, January 26, 2012

சுதந்திரமா(ய்)?


சுதந்திரத்திற்காக அந்நாளில்
என்ன காரணுத்துக்காக பாடுபட்டார்களோ
அது அனைத்தும் வீணென்பர்
இன்றைய சூழல் கண்டு…
மற்றவர் கட்டுப்பாட்டில் இருந்தபோது
கட்டுப்பட்டு ஒன்றாய் சுதந்திரம் வேண்டுமென….
ஒற்றுமையாய் ஆனால், கிடைத்தபின்
ஒருவர்க்கொருவர் ஒற்றுமையின்றி
நாகரீகம் என்ற போர்வைக்குள்
நாகரீகமற்று…. இயற்க்கைகூட
எதிரியாய், பருவம் மாறிடக்கண்டு என் நெஞ்சம்
பதைக்கின்றதே….
அரசியல்வாதிகளின் சுயாட்சி சூழலின் சதி
சுயநலவாதிகளின் சூழ்நிலைக்கொண்டாட்டம்
அற்பர்களின் ஆணவ ஆரவாட்டம் எனப் பலப்பல
அய்யகோ மீண்டும் சுதந்திரம்
சுதந்திரமாய் நடமாடுவதெப்போது?
உண்மை சுதந்திரம் கிடைப்பதெப்போது?

1 comment:

  1. நிரம்பவும் சிந்திக்க வேண்டிய கருத்து..

    ReplyDelete