Friday, December 30, 2011

என்னுள்(ளத்தில்) தோன்றியது


கடந்து வந்த பாதையை
பின்னோக்கி காணுகிறேன்
அப்பப்பா… இத்துனை கரடுமுரடானதா?
அடிபட்டு..மிதிபட்டு…வதைப்பட்டு…
அப்பாடி….வந்து சேர்ந்துவிட்டோமா?
என்று பெருமூச்சு வாங்கும்போது
மூப்பு மூச்சு முட்டுகிறது……
இது வரை சாதிக்காதை சாதிக்க
காலம் கனிந்து வரவேண்டும்
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
கிடைத்திடுமா? பொறுத்திருப்பேனா?
பொறுக்க இருப்பேனா? இருந்தால் பெருமை
இறந்தால் மறுமை யிலும் தொடர்வேன்….
தொடரும் வரை தொடர்ச்சியாய்
படரும் முழுமூச்சாய்….

மீண்டும்

காலத்தை இருந்தபோது சரியாக பயன்படுத்தாது
காலம் சென்றபின் வருத்தப் படுதலாகாது


காலத்தை வகுத்தவன் ஒரு நாளுக்கு 24 மணித்தியாளம்
என்பதை கால நீட்டிப்பு செய்திருக்கலாகாதோ?


காலத்தின் கொடுங்கோலாட்சி 
காத்திருக்கும்போது தெரிகிறது
கொடிது கொடிது காத்தல் கொடிது.
அதனினும் கொடிது உரையாடல் இல்லாதது..
-எனது விடுமுறை வீணே போனது கண்டு


கடந்து வந்த பாதையை திரும்ப பார்த்தால்
நடந்து போகும் பாதையை திருத்த வாய்ப்புக் கிட்டும்

என்னுள்

கடந்து வந்த முட்பாதைகூட மலர்பாதையாகும் 
மனம் பக்குவப்படும் போது


என்னுள் புதைந்து கிடந்ததை வெளிக்கொணர்ந்தபின் மூப்பு மறைந்து இளமைதிரும்பியது போலுணர்கிறேன்


வாழ்க்கையின் அர்த்தம் வாழ்ந்தபின் புரிகிறது
வாழும்போது தெரிந்தால் செம்மையாய் வாழ்லாம்
பிரிவின் அர்த்தம் பிரிந்தபின் புரிகிறது, ஏன்
பிரிந்தோமென்று.


நான் ஒரு சுயநலவாதியாகிறேன்
மற்றவர் நலமாய் வாழவேண்டி நான் வாழும்போது


திருடன் திருடுகிறான் எப்போது? எதனால்? இல்லாமை..
(கையில், யாரும்)


எதிரியும் நல்லவனாய்த் தெரிவான்,
நாம் அவனாய் இருந்துப் பார்க்கும் போது.


கடந்து வந்த பாதையை திரும்ப பார்த்தால்
நடந்து போகும் பாதையை திருத்த வாய்ப்புக் கிட்டும்


விஞ்ஞான வளர்ச்சிக் கண்டு வியப்படைகிறேன், அதே சமயம் வருத்தப்படுகிறேன் எனது மூப்பின் காரணமாய், எனது கடந்துபோன(வாலிப) வயதில் குடும்பசூழல் காரணமாய், இன்று ஏன் நான் புதிதாய் பிறக்கக் கூடாதா என்று?
மனிதன் பிறந்து இறக்கிறான்
கவிஞன் இறந்தும் பிறக்கிறான் பன்(ண்)முறை


நாவு நோவாமல் நயம்படப் பேசு
நாந(ண)யம் பெறுவாய்


கவியின் கவி வாழும்
புவி வீழும் வரை

Thursday, December 29, 2011

என்றோ உதித்தது!!!

காலம் கடந்தபின்தான் காலத்தின் அருமைதெரிகிறது.
நாளையப் பொழுது நல்லதாய் விடியட்டும்.

எது நடந்தாலும் காரணம் நாமே!,
அது விடுத்து மற்றவரைக் குறை கூறுவதை விடுவது நலமே!!

செய்யும் காரியத்தைச் சிரத்தையுடன் செய்தால் நல்லதே நடக்கும்.

நமக்கு நல்லது நடக்குமென்று எதிர்பாராமல்,
மற்றவர்க்கு உதவும் எண்ணம் வேண்டும்.

Wednesday, December 28, 2011

என் எ(வ)ண்ணச்சிதறல்கள்

மற்றவர் வாழ்த்த நாம் வாழ்வோம்
துன்பம் செய்வோருக்கும்
நன்மை செய்வோம்
பகையாளியையும் பங்காளியாக்குவோம்