Friday, December 30, 2011

என்னுள்(ளத்தில்) தோன்றியது


கடந்து வந்த பாதையை
பின்னோக்கி காணுகிறேன்
அப்பப்பா… இத்துனை கரடுமுரடானதா?
அடிபட்டு..மிதிபட்டு…வதைப்பட்டு…
அப்பாடி….வந்து சேர்ந்துவிட்டோமா?
என்று பெருமூச்சு வாங்கும்போது
மூப்பு மூச்சு முட்டுகிறது……
இது வரை சாதிக்காதை சாதிக்க
காலம் கனிந்து வரவேண்டும்
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
கிடைத்திடுமா? பொறுத்திருப்பேனா?
பொறுக்க இருப்பேனா? இருந்தால் பெருமை
இறந்தால் மறுமை யிலும் தொடர்வேன்….
தொடரும் வரை தொடர்ச்சியாய்
படரும் முழுமூச்சாய்….

No comments:

Post a Comment