Friday, January 6, 2012

சிந்தனை எதிரொலி


சிந்தனை செய் மனமே
நிந்தனை செய்யாதிருக்க
வந்தனை செய்குவோம்
எந்தனை நல்வழி நடத்திட..

காலத்தின் கட்டாயம்
காத்திருப்போர் ஏராளம்
சூது இல்லா
மாது வேண்டி

கிடைத்தற்கரிய மானுட ஜென்மம்
கிடைத்தது கண்டு பெருமைப் படு மனிதா
நற்சிந்தனை, மற்றுயிர்மீது அன்பு
நமையன்றி வேறு
உயிர்க்குண்டோ இப்பேறு
என அறை கூவல் கூறு
மாற்றியமைத்திட்டோம் பாரு
என்றே மற்றவர் வியந்திடக் கூறு
வருவது வரட்டும் துனிவுடன் முன்னேறு
தருவது தரட்டும் பனிவுடன் ஏற்று… 

No comments:

Post a Comment